தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் இடையிலான பாலம் போன்ற நிலப்பரப்புக்குப் பின்னால் நாடளாவிய அரசியலும் உண்டு உலகளாவிய மதச்சாயமும் உண்டு. தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கு இடையே இருப்பது மண்ணாலான இணைப்பு என்கிறது அறிவியல். நாசாவே சொல்லிவிட்டது அது ராமர் கட்டிய பாலம் என்கிறது இந்து மதம். இல்லை அது ஆதாம் பாலம் என்கிறது கிறிஸ்தவ மதம். இல்லை இல்லை அது சேதுபதி மன்னர்கள் ஆண்டதால் அதனை சேதுப்பாலம் என்கிறார்கள் ஒரு சாரார். அந்த நிலப்பரப்புக்குப் பின்னால் இருக்கும் வரலாற்று உண்மை என்ன? அறிவியல்பூர்வமாக அலசுகிறது இந்தக்காணொளி.